CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, April 5, 2009

தோழா நீ வீரனடா...

வீறுகொண்டு எழுந்து வா,,,

என் வீரத் தோழா.

பூகம்பத்தை கடந்திடலாம்...

பூ கம்பத்தில் ஏறி நின்று புது புரட்சி செய்யலாம்.

 


வீரு கொண்டு எழுந்து வா,,,
என் வெற்றி தோழா.
ஆழ் கடலில் இன்னும் ஏன் தத்தழிப்பு..?
அலைகளை கடந்து வா,,,
கரையில் உனக்கு பரிசளிப்பு.

வீறுகொண்டு எழுந்து வா,,,
என் சாதனை தமிழா.
சிகரத்தை கண்டு பயம் எதற்கு..?
உச்சியில் நின்று பார் சிறகுகள் முளைக்கும் உனக்கு.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் புரட்சி தோழா.
குற்றம் சொல்லும் சுற்றம் ஓயாது...
சுற்றங்களை விட்டு விடு,,,
மாற்றங்கள் செய்து விடு.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் தங்கத் தோழா.
வெறும் கையாள் முளம் போட்டது போதும்...
கரங்களை தட்டு மலைகளும் நகரும்.

வீறு கொண்டு எழுந்து வா,,,
எங்கள் பெருமை நாட்ட வந்த பொறுமை தோழா.
உன் பெயரை உரைக்காத இதழ்களா..?
உனக்காக நடத்தும் இந்த உலகம் ஒரு வெற்றி விழா.

1 comments:

barath said...

bro, it,s a good kavithai. wishes 4 u. thanks..................